செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் இன்று இயங்காது!
செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரயில்கள் இன்று ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: செங்கல்பட்டு - தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி முதல் வண்டலூர் வரை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இன்று காலை 8.25 முதல் மாலை 6.40 வரை மின்சார இயங்காது என தெற்வே ரயில்வே அறித்துள்ளது.

இதனால் இந்த பகுதிகளுக்கு இடையே மின்சார ரயில் சேவையினால் 10 மணி நேரத்திற்கும் கூடுதலாக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது,
இப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பணிகளை திட்டமிட்டு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாலைக்கு பின்னர் வழக்கமான சேவை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications