எங்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும் - சென்னை ஆணையரிடம் திருநங்கைகள் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருநங்கைகள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதை நிறுத்தக் கோரி, சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று தோழி, சகோதரன் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

மேலும், திருநங்கைகள் என்ற ஒரே காரணத்துக்காக போலீஸார் தங்கள் மீது விபச்சாரம், திருட்டு உள்ளிட்ட பொய் புகார்களில் கைது செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்ததாகவும் திருநங்கைகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications