அமைச்சருடன் நடத்திய பேச்சு மீண்டும் தோல்வி.. பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் தொடர்கிறது
போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
சென்னை: போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியந்துள்ளது. கோரிக்கைகளை ஏற்க அரசு மறுப்பதால் பஸ் ஊழியர்கள் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொழிற்சங்கங்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுத்ததால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்றே வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள்பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இன்று ஸ்டிரைக் முடிவுக்கு வருமா என எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
ஆனால் கோரிக்கையை ஏற்க அரசு மறுப்பதாக பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இதனால் அறிவித்தப்படி நாளை முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
அரசின் அடக்குமுறை நடவடிக்கையால்தான் இப்போதே வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். வேலைநிறுத்தம் உறுதியாகியுள்ளதால் நாளை அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications