தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. பிரதமர் மோடி ஒரு துளி கண்ணீர்கூட வடிக்கவில்லை: பேராசிரியர் அருணன்
தூத்துக்குடி சம்பவத்துக்கு பிரதமர் மோடி வருத்தப்படவே இல்லை என அருணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக ஒருதுளி கூட பிரதமர் மோடி கண்ணீர் வடிக்கவில்லை என்று பேராசிரியர் அருணன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன கூட்டமும் மதுரை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இதில் அச்சங்கத்தின் கௌரவ தலைவர் அருணன் கலந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தின் அனைத்து துறவிகளும், சாமியார்களும், சித்தர்களும் அன்பே சிவம் என்று கூறி, அன்பைதான் முதன்மைப்படுத்திதான் இருக்கிறார்கள். அதேபோல குன்றக்குடி அடிகளாலும் பாலபிரஜாபதி அடிகளார் போன்றோரும் மதவெறியை எதிர்த்து அன்பை போதித்தார்கள். ஆனால் ஆர்எஸ்.எஸ் அமைப்பு மதவெறியை தூண்டிவிட்டு வருகிறது. இதனால் மற்ற மதங்கள் மீதும் பகைமையை ஏற்படுத்தும்படி செயல்பட்டு வருகிறது.
இனி ஆர்எஸ் எஸ் சாமியார்கள் இல்லாத தமிழகத்தையும், காவியற்ற தமிழகத்தையும் உருவாக்க வேண்டும். ஆர்எஸ்எஸ், பிற மத மக்களுக்கும், இந்துமத மக்களுக்கும் எதிரி. எச்.ராஜாவின் மூலம் காவி எவ்வளவு ஆபத்தானது என்பது தமிழக மக்களுக்கு புரிந்திருக்கும். மதுரையில் 8 ஆயிரம் சமணர்களை கொலை செய்ததை பெரியுபுராணம் பெருமையாக பாடியதால்தான் கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் சிங்காரவேலரும் தந்தை பெரியாரும் கடுமையாக போராடினார்கள்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலவளத்தை பாதுகாக்கவும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தையும் மதவெறியையும் நாம் எதிர்க்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்காக பிரதமர் மோடி ஒரு துளி கூட கண்ணீர் வடிக்கவில்லை. அத்துடன் அந்த நிகழ்வுக்கும் அவர் வருத்தப்படவில்லை. இந்த துப்பாக்கி சூடு குறித்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அருணன் பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications