For Daily Alerts
Just In
திருச்சி அருகே ஏரியில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
திருச்சி: திருச்சி அருகே ஏரிக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர்.
திருச்சி அருகே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பூவாளூர் அருகே ஏரி ஒன்றில் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது. ஏரியில் நீர் இல்லாததால் பயணிகள் காயத்துடன் உயிர் தப்பினர். பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது.
இந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த பயணிகள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Comments
English summary
Near Trichy 15 persons were injured as a bus fell down in a lake accidentally.
Story first published: Monday, October 20, 2014, 8:30 [IST]