கழிவு நீர் கால்வாயில் கர்ப்பப்பையுடன் மிதந்து வந்த 3 சிசுக்கள்... திருச்சி அருகே பயங்கரம்!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி கழிவு நீர் கால்வாயில் உயிரற்ற நிலையில் 3 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே கழிவு நீர் கால்வாயில் கர்ப்பபையுடன் 3 சிசுக்கள் மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்பாறை அருகே உள்ளது துவரங்குறிச்சி. அங்குள்ள கழிவு நீர் கால்வாய் ஒன்றில் உயிர் இழந்த நிலையில் சிசுக்கள் மிதந்து வந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து கர்ப்பபையுடன் 3 சிசுக்கள் மிதந்து வந்ததைத் தொடர்ந்து, இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுகாதாரத் துறை ஊழியர்கள், சிசுக்களின் சடலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications