Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேனில் வேகமாக போன தனலட்சுமி.. சாக்குமூட்டையில் என்னப்பா அது..வாக்குமூலத்தை கேட்டு ஆடிப்போன திருச்சி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சிவலிங்கத்தை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள, நான் இரும்பு கம்பியால் அடித்தேன்.. பின்னர் 2 பேரும் கயிற்றால் சிவலிங்கத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம் என திருச்சி வெங்காய வியாபரி கொலை வழக்கில் அவரது மனைவி தனலட்சுமி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். முறை தவறிய உறவும், மதுவால் ஏற்பட்ட வன்முறையும் கொலை வரை போய் உள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே வாசன்வேலியைச் சேர்ந்தவர் 44 வயதாகும் சிவலிங்கம் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவர் மதுரை மேலூரை சேர்ந்த தனலட்சுமி(36) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் செய்தார். வாசன்வேலி 10வது குறுக்குத் தெருவில் இவர்கள் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தார்கள்.

Trichy Onion Trader Murder Case, Wife given Confession to police

சிவலிங்கத்துக்கு குடிபழக்கம் உள்ளதாம். தினமும் மது குடித்துவிட்டு வந்து தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி, தனது உறவினரான செந்தில்குமாரை(40) வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர்கள் இருவரும் சிவலிங்கத்தை அடித்துக் கொலை செய்தனர்.

பின்னர் தனலட்சுமியின் உறவினரான ஆறுமுகம்(55), அவரது மனைவி சுமதி(42) ஆகியோர் உதவியுடன், சிவலிங்கத்தின் உடலை பெட்ரோல் ஊற்றி எரிக்க முடிவு செய்தனர். இதன்படி சிவலிங்கம் உடலை மணப்பாறை பகுதிக்கு ஒரு வேனில் கொண்டு சென்றுள்ளனர்.

நவலூர் பகுதியில் சென்றபோது, அவர்கள் ராம்ஜிநகர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்கள். அப்போது செந்தில்குமார் தப்பியோடிவிட்டார். இதையடுத்து தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சோமரசம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வழக்கு பதிவு கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்தனர்.

அப்போது போலீசாரிடம் தனலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தில் தனலட்சுமி கூறியதாக போலீசார் சிலதகவல்கள் வெளியிட்டனர். அதில் மதுரை மேலூரை சேர்ந்த பிரபு என்பவருக்கும் எனக்கும் (தனலட்சுமி) முறைப்படி கல்யாணம் நடந்தது.இவரும் சேர்ந்து வாழ்ந்தோம். எங்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார். எனக்கும் பிரபுவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துவிட்டோம். இதனால் நான் என் மகளை மதுரை மேலூரில் உள்ள ஒரு விடுதியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறேன். இதனிடையே கணவனை பிரிந்த நான், எனது உறவினரான திருச்சி கருமண்டபத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரது வெங்காய கடையில் வேலைக்கு சேர்ந்தேன்.

திருச்சி கருமண்டபத்தில் வெங்காய வியாபாரம் செய்த சிவலிங்கத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளான். இந்நிலையில் எனது 2-வது கணவரான சிவலிங்கம் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்தார். இது எனக்கு எரிச்சலாக இருந்தத. இது பற்றி நான் எனது உறவினர் செந்தில்குமாரிடம் கூறிய போது அவர் எனக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனால் எனக்கும், செந்தில்குமாருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பழக்கத்தை வளர்த்து வந்தோம்.

இதனிடையே சிவலிங்கம், விடுதியில் உள்ள எனது மகளை அழைத்து வந்து தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தினார். மேலும் என்னை விபசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தினார். அத்துடன் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். இது பற்றி செந்தில்குமாரிடம் தெரிவித்தேன்.

Trichy Onion Trader Murder Case, Wife given Confession to police

இதையடுத்து நேற்று முன்தினம் நானும் செந்தில்குமாரும் அவரிடம் பேசினோம். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிவலிங்கத்தை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள, நான் இரும்பு கம்பியால் அவரை ஓங்கி அடித்தேன். பின்னர் 2 பேரும் சேர்ந்து, கயிற்றால் சிவலிங்கத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

பின்னர் இந்த கொலையை மறைக்க, சிவலிங்கத்தின் உடலை சாக்கால் மூடி இரும்பு கம்பியால் சுற்றிக்கொண்டோம். இந்த கொலை பற்றி எனது உறவினர் ஆறுமுகம், அவரது மனைவி சுமதி ஆகியோருக்கு தெரிவித்தேன். இதையடுத்து அவர்கள் உதவியுடன் ஒரு வேனில் பிணத்தை ஏற்றிக்கொண்டு, அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்றோம். அங்கு ஒரு கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு, மணப்பாறை நோக்கி சென்றோம். அப்போது நவலூர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அருகே சென்றபோது, அங்கு வந்த போலீசார் எங்களை பிடித்து விட்டார்கள். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+