நகர மாட்டோம், பேசவும் மாட்டோம்... திருச்சியில் போலீஸாருக்கு சவால் விடும் மக்கள்!

திருச்சியில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மவுனப் போராட்டத்தில் குதித்துள்ளதால் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் போராட்டம் நடத்தி வரும் மக்களைக் கலைக்க முயன்ற போலீஸார் மக்கள் அமைதி வழியில் ஒருங்கிணைந்து மேலும் பலத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவர்களைக் கலைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

திருச்சியிலும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. அவர்களையும் காலையில் போலீஸார் கலைத்தனர். பலரைக் கலைத்த நிலையில் பெரும் திரளானோர் கலைய மறுத்து சாலையோரம் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

Trichy protesters defiant in their stand

இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் நிரந்தர சட்டம் வராமல் நாங்கள் போக மாட்டோம் என்று மக்கள் கூறி விட்டனர். இதையடுத்து போலீஸார் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

தற்போது இளைஞர்களும், பெண்களும், மாணவர்களும் வாயில் கையை வைத்து பொத்திக் கொண்டு நாங்கள் பேச மாட்டோம். அமைதியாக போராடுவோம். கலைந்து போக மாட்டோம் என்று உறுதிபடக் கூறி விட்டனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸார் திகைத்துப் போய் நிற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+