தினகரன் அணியினர் அதிமுக வேஷ்டி கட்டினால் உருவுங்கள் : அமைச்சர் மணிகண்டன் 'அதிரடி' பேச்சு
தினகரன் அணியினர் அதிமுக வேஷ்டி கட்டி இருந்தால் உருவுங்கள் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியுள்ளார்.
Recommended Video

ராமநாதபுரம்: அதிமுகவிற்கு துளியும் தொடர்பில்லாத டி.டி.வி தினகரன் அணியினர் அதிமுக கரைவேஷ்டி கட்டி இருப்பதைப் பார்த்தால் அதை அங்கேயே உருவுங்கள் என்று அமைச்சர் மணிகண்டன் தொண்டர்களிடையே பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை அருகே நடந்தது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

அங்கு கூடியிருந்த தொண்டர்களிடத்தில் அவர் பேசுகையில், அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. தினகரனை நம்பிச் சென்றவர்கள் குக்கர் தூக்க மட்டுமே லாயக்கு என்று விமர்சித்தார்.
மேலும், டி.டி.வி தினகரன் அணியினர் அதிமுக கரை வேஷ்டியையும் அதிமுக கொடியையும் பயன்படுத்துவதைக் கடுமையாகக் கண்டித்துப் பேசினார். அதிமுகவில் இருந்து சென்றவர்கள் துரோகிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் அதிமுக கரைவேஷ்டியை டி.டி.வி தினகரன் அணியினர் யாராவது கட்டி இருப்பதைப் பார்த்தால், அதை அங்கேயே உருவுங்கள் என்றும் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.












Click it and Unblock the Notifications