போயஸ் கார்டனில் சோதனை நடத்துவது ஜெ.வின் ஆன்மாவுக்கு துரோகம்: தினகரன் திடீர் பதற்றம்
போயஸ்கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: போயஸ்கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்த நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
போயஸ்கார்டனில் உள்ள பூங்குன்றனின் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு டிடிவி தினகரனி டிவிட்டர் வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
செய்யக் காத்திருக்கிறார்கள்..?
தங்களின் ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்யக் காத்திருக்கிறார்கள்..? என்றும் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
ஜெ.ஆன்மாவுக்கு துரோகம்
போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் என்றும் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
|
எடப்பாடியின் துரோக அரசு
அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சசி குடும்பத்தை அசிங்கப்படுத்த
முன்னாள் எம்எல்ஏ விபி கலைராஜனும் வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் கலைராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெ.பெயரை கெடுக்க
வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் ஆட்சேபனை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் பெயரை கெடுக்கவே இந்த சோதனை நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ஒரு குடும்பத்தை குறிவைத்து
வருமான வரித்துறை சோதனைகள் தமிழக மக்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். ஒரு குடும்பத்தை மட்டும் குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது என்றும் விபி கலைராஜன் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications