நாஞ்சில் சம்பத் விலகியதால் இழப்பு இல்லை.. டிடிவி தினகரன் பொளேர்
நாஞ்சில் சம்பத் கூறுவதை என்னால் ஏற்க முடியாது என்று தினகரன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: எனது அமைப்பின் பெயரில் திராவிடம் இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிமுகவை மீட்பதற்காக கடந்த 15-ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை தினகரன் தொடங்கினார். இதன் கொடி கருப்பு, வெள்ளை, சிகப்பில் ஜெயலலிதா உருவம் பொறித்து காணப்படுகிறது.
இந்நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், தினகரன் தொடங்கிய அரசியல் அமைப்பில் அண்ணா திராவிடம் இல்லை என்பதை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி தினகரன் அணியிலிருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்.

தினகரன் விளக்கம்
தினகரனின் அரசியல் அமைப்பின் பெயரில் தனக்கு திருப்தி இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதுகுறித்து தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தொடர்பில்லையா
அப்போது அவர் கூறுகையில், திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. ஜெயலலிதாவுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இல்லாதது போல் பேசுகிறார்.

திராவிடம் பேசி
சங் பரிவார் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனவே திராவிடம் பேசி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நாஞ்சில் விலகியது எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவர் விலகியதால் யாருக்கும் இழப்பில்லை.

நீதிமன்றம் அனுமதி
தமிழிசையை விமர்சித்து குறித்து நான் கேட்டதிலிருந்து நாஞ்சில் என்னிடம் சரியாக பேசுவதில்லை. கட்சியின் பெயரை காரணமாக கூறி நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தம் அளிக்கிறது. கட்சியின் பெயரில் திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. நாங்கள் பரிந்துரைத்த பெயர்களில் திராவிடம் இருந்தது, அவை எங்களுக்கு கிடைக்கவில்லை. குக்கர் சின்னம் கிடைக்க எங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது.

கொடிக்கு சம்பந்தமில்லை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு இடைக்கால ஏற்பாடுதான். அதிமுகவின் கொடிக்கும் எங்கள் கொடிக்கும் சம்பந்தமில்லை. திமுகவினர் கொடியில் கூடதான் கருப்பு, சிகப்பு உள்ளது. அதற்காக அந்த இரு கொடிகளும் ஒன்று என்று சொல்லிவிடமுடியுமா என்று கேள்வி எழுப்பினார் தினகரன்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications