உப்பை திண்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.. டிடிவி தினகரனை வாரும் ஹெச்.ராஜா!
டிடிவி தினகரன் தவறுக்கு மேல் தவறு செய்வதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை: டிடிவி தினகரன் தவறுக்கு மேல் தவறு செய்வதாக பாஜக தேசி செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் உப்பைத் தின்றவர்கள் தண்ணீர் குடிக்கவேண்டும் என்றும் ஹெச் ராஜா கூறினார்.
மதுரையில் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு
பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் டிடிவி தினகரன் தவறுக்கு மேல் தவறு செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
டிடிவி தினகரன் கொடுத்த 60 நாள் அவகாசம் எதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் உப்பை திண்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் ஹெச் ராஜா டிடிவி தினகரனை சாடினார்.
முடங்கி கிடக்கும் அரசு
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசு எந்திரம் செயல்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மணல் அள்ளும் பணியை அரசே நடத்தும் என்றவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஹெச்.ராஜா கூறினார்.
மணல் தட்டுப்பாடு
இதனால் பெரும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்கவில்லை என்றும் ஹெச் ராஜா குற்றம்சாட்டினார்.
ஒரே மாற்று பாஜக தான்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு ஒரே மாற்று, பா.ஜனதா மட்டுமே. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விட்டது என்றும் ஹெச் ராஜா கூறினார்.
முன்னிருந்து இயக்குவோமே தவிர..
தமிழக அரசை நாங்கள் பின்னிருந்து இயக்குவதாக சொல்கிறார்கள். நாங்கள் எந்த அரசாங்கத்தையும் முன்னிருந்து இயக்குவோமே தவிர, பின்னிருந்து இயக்குவது இல்லை என்றும் ஹெச் ராஜா தெரிவித்தார்.