தினகரன் தம்மை ஒரு 420 என அழைத்துக் கொண்டவர்.. ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு
தினகரன் தன்னைத் தானே ஒரு 420 என அழைத்துக்கொண்டவர் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் தன்னைத் தானே ஒரு 420 என அழைத்துக்கொண்டவர் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது டிடிவி தினகரன் தன்னைத் தானே ஒரு 420 என அழைத்துக்கொண்டவர் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தினகரன் தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியதாக சொல்வது பொய் என்றும் அவர் கூறினார்.
தமக்கு இன்னொரு முகம் இருப்பதாக தினகரன் கூறியிருக்கிறார் என்றும் ஓ பன்னீனர்செல்வம் குற்றம்சாட்டினார். ஜெ. மீது பாசம் இருந்திருந்தால் வீடியோவை வெளியிட்டிருக்கமாட்டார் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட 2ஜி வழக்கில் திமுகவினர் விடுவிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் முதல் ஆளாய் வாழ்த்து சொல்லியிருப்பது ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம் என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.
தினகரன் அரசியலுக்கு வருவதற்கு 18 வருடங்கள் முன்பே தான் அரசியலுக்கு வந்தவன் என்றும் எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் தரப்புக்கு செல்லவில்லை என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தங்களிடம் இருப்பவர்கள் புடம் போட்ட தங்கங்கள் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். துரோகம் செய்தவர்கள் கட்சி விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications