கேசி பழனிச்சாமி என்னை தொடர்பு கொண்டால் பார்க்கலாம்- டிடிவி தினகரன்
கேசி பழனிச்சாமி என்னை தொடர்பு கொண்டால் பார்க்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: கேசி பழனிச்சாமி இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை, அவர் தொடர்பு கொள்ளட்டும் பின்னர் பார்க்கலாம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கடந்த 15-ஆம் தேதி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அந்த அமைப்பின் கொடியில் ஜெயலலிதா படம் இருப்பதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாஜகவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கேசி பழனிச்சாமி தெரிவித்ததால் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சிக் கொடி விவகாரத்தில் எடப்பாடியின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிதான் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற பதவியாகும்.
அமைச்சர் தங்கமணி தனித்து செயல்படுவது குறித்து எடப்பாடி ழனிச்சாமியிடம்தான் கேட்க வேண்டும். கேசி பழனிச்சாமி இன்னும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும் பிறகு அவரை என் கட்சியில் இணைத்து கொள்வது குறித்து பார்ப்போம் என்றார் டிடிவி தினகரன்.