வாழைப்பழத்தில் நி்ன்றவரே ஜெயிச்சிருக்கார்.. நான் வெல்ல மாட்டேனா... தினகரன் பலே!

ஆர்.கே நகர் தேர்தலில் எந்த சின்னம் கிடைத்தாலும் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே நகர் தேர்தலில் எந்த சின்னம் கிடைத்தாலும் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறி இருக்கிறார். மேலும் ஊடகங்களின் பலத்தினால் சின்னம் எளிதில் மக்களிடம் சென்றுவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் டிடிவி தினகரன் அணிக்கு கிடைக்காத நிலையில் இந்த தேர்தல் மிகவும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

TTV Dinakaran talks about new symbol for RK Nager election

இந்த நிலையில் தான் போட்டியிட போகும் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் குறித்து டிடிவி தினகரன் பேசியிருக்கிறார். அதில் "இரட்டை இலை சின்னம் இல்லாததால் பிரச்சனை இல்லை. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் ''எந்த சின்னம் கிடைத்தாலும் கண்டிப்பாக போட்டியிடுவேன். வேட்பாளர் யார் என்பதுதான் முக்கியம். சின்னம் முக்கியம் இல்லை'' என்றும் கூறியுள்ளார். அதேபோல் ''ஊடகங்களின் பலத்தினால் எனக்கு கிடைக்கும் சின்னம் எளிதில் மக்களிடம் சென்றுவிடும். வாழைப்பழ சின்னத்தில் நின்ற வேட்பாளர் கூட ஜெயித்திருக்கிறார். ஆகவே நானும் வெற்றிபெறுவேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+