For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை இலை சின்னம் வழக்கு: தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!

இரட்டை இலைச்சின்னம் வழக்கு தொடர்பாக தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இரட்டை இலைச்சின்னம் வழக்கு தொடர்பாக தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

இரட்டை இலைச்சின்னம் மற்றும் அதிமுக கட்சியை கைப்பற்ற ஓபிஎஸ் ஈபிஎஸ் மற்றும் தினகரன் தரப்பு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ஆவணங்களை இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

TTV Dinakaran team submitted 1000 more affidavits in the election commission

இதையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இணைந்து மினி லாரியில் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதனைத்தொடர்ந்து தினகரன் சார்பில் கடைசி நாளான இன்று தினகரன் சார்பில் 1000 பிராமண பாத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் கோரி தினகரன் தரப்பு மனு அளித்துள்ளது. இரட்டை இலை சின்னம் வழக்கின் இறுதி விசாரணை அக்.6-ம் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும் ஈபிஎஸ் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக என்ற பெயரை பயன்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

English summary
TTV Dinakaran team submitted 1000 more affidavits in the election commission. His team filed a petition seeking a further 3 days time to the Election Commission of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X