டிவிட்டரில் நன்றி சொல்லி விட்டு அதிமுகவை விட்டு ஓடினார் தினகரன்!
அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
சென்னை: டிடிவி தினகரன் அதிமுகவை விட்டு முழுவதுமாக ஒதுங்கியுள்ளார். ஒற்றுமையாக இருங்கள் என்றும் அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார் ஓ.பன்னீர் செல்வம். கட்சி இரண்டாக பிளவு பட்டது. இந்த சூழ்நிலையில் சசிகலாவும் சிறைக்கு செல்லவே அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் டிடிவி தினகரன்.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். ஆனால் டிடிவி தினகரனின் தலையீடு அதிகம் இருக்கவே, கொங்கு மண்டல அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதன் உச்சக்கட்டமாக அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை விலக்கி வைப்பதாக கூறினர். இதற்கு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் அதிமுகவில் இருந்து விலகிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று கூறிய அவர் இதுநாள் வரை தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
அவரது டுவிட்டுகளை உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
|
நான் காரணமாக இருக்க மாட்டேன்
கட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு நான் என்றும் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
|
அச்சம் கூடாது
ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்க சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது.
|
ஒற்றுமையாக இருங்கள்
எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்த காரணத்தை கொண்டும் கட்சி பிளவுபட்டு விடக்கூடாது அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்.
|
மனமார்ந்த நன்றி
எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார். இதன் மூலம் தான் அதிமுகவில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதை உணர்த்தியுள்ளார் தினகரன்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
பச்சைக் கொடி காட்டிட்டாரா விஜய்? பவன் கல்யாண் சொன்ன "நீங்க பாதி.. ஆனாலும் யாருமே எதிர்பாராத சிக்கல் -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை!












Click it and Unblock the Notifications