வேலை வாங்கித் தருவதாக கூறி 14 பேரிடம் மோசடி.. சேமியா கம்பெனி ஓனர் கைது
தூத்துக்குடி: தமிழகத்திலுள்ள பிரபல வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 14 பேரிடம் பணமோசடி செய்த திண்டுக்கல் சேமியா நிறுவன உரிமையாளரை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பிரதீபன் என்ற சதீஷ்குமார். இவர் திண்டுக்கல், பழனி சாலையில் அன்னை சேமியா என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். இவர் தமிழகத்திலுள்ள பிரபல வங்கிகளான கரூர் வைசியா, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிகளில் வேலை வாங்கித் தருவாக கூறி பணம் பெற்றுக் கொண்டு போலியான வேலை நியமன உத்தரவு வழங்கி வந்துள்ளார்.
இதுதொடர்பாக கரூர் வைசியா வங்கி நிறுவனத்தினர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் மோசடி நபரை கைது செய்திட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நடத்திய விசாரணையில், பிரதீபன், திருச்செந்தூர் அனந்தகிருஷ்ணன், வீரபாண்டியன்பட்டணம் அனுஷா, ஹெர்மினா, ஓரத்தநாடு அன்பரசன், மேலக்கரந்தை உதயராணி உட்பட 14பேரிடம் 50ஆயிரம், 80ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 81ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன உத்தரவு வழங்கியது தெரியவந்தது.
இதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் மோசடி நபரான பிரதீபனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடியிலுள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் தங்கியிருந்த பிரதீபனை புலனாய்வுக்குழு போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஒரு கார், 4 செல்போன்கள், 2 லேப்டாப், வங்கிகளின் போலியான முத்திரைகள், பத்திரங்கள் மற்றும் 22 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மோசடி நபரை கைது செய்த சிறப்பு புலனாய்வு குழுவினரை நெல்லை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் பாராட்டினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications