தொடரும் கன மழையால் நெல்லை- தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து துண்டிப்பு
தூத்துக்குடி: தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரபள்ளம் குளத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி வருகிறது. இதனால் வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்காக நெல்லை-தூத்துக்குடி சாலையை துண்டித்து நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தூதுக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி புறநகர் பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. உப்பாத்து ஓடை, கோரம்பள்ளம் குளம் மதகு உடைந்து சுமார் 5000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ராஜீவ் நகர், புதுக்கோட்டை, அந்தோணியார் புரம், மறவன் மடம், தபால் தந்தி அலுவலர் குடியிருப்பு உள்ளிட பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இன்று திங்கள் கிழமை நடபெற வேண்டிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் மாநகராட்சி, தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் 21 மதகுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது, இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்காக நெல்லை-தூத்துக்குடி சாலையை பெயர்த்து, நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக மறவன் மடம் பகுதி தனித்தீவு போல் காட்சியளிக்கிறது.
பேருந்துகள் ரத்து:
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் ரோடு வழியாக முக்காணி , ஆத்தூர்,சாகுபுரம்,குரும்பூர், வழியாக திருநெல்வேலிக்கு மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டது. தூத்துக்குடி- திருச்செந்தூர் பஸ்களும் ரத்து செய்யப்பட்டன.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications