தொடரும் கன மழையால் நெல்லை- தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து துண்டிப்பு
தூத்துக்குடி: தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கோரபள்ளம் குளத்தில் வெள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி வருகிறது. இதனால் வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்காக நெல்லை-தூத்துக்குடி சாலையை துண்டித்து நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
தூதுக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி புறநகர் பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. உப்பாத்து ஓடை, கோரம்பள்ளம் குளம் மதகு உடைந்து சுமார் 5000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ராஜீவ் நகர், புதுக்கோட்டை, அந்தோணியார் புரம், மறவன் மடம், தபால் தந்தி அலுவலர் குடியிருப்பு உள்ளிட பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இன்று திங்கள் கிழமை நடபெற வேண்டிய மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் மாநகராட்சி, தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் 21 மதகுகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது, இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளநீர் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்காக நெல்லை-தூத்துக்குடி சாலையை பெயர்த்து, நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் புதுக்கோட்டையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் காரணமாக மறவன் மடம் பகுதி தனித்தீவு போல் காட்சியளிக்கிறது.
பேருந்துகள் ரத்து:
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் ரோடு வழியாக முக்காணி , ஆத்தூர்,சாகுபுரம்,குரும்பூர், வழியாக திருநெல்வேலிக்கு மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டது. தூத்துக்குடி- திருச்செந்தூர் பஸ்களும் ரத்து செய்யப்பட்டன.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications