சோமாலியாவில் தவிக்கும் தூத்துக்குடி கப்பல் ஊழியர் – மீட்கக் கோரி பெற்றோர் கண்ணீர்
நெல்லை: சோமாலியா கடல் கொள்ளையர்கள் பிடியில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி கப்பல் ஊழியரை மீட்க வேண்டும் என அவரது பெற்றோர் கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மொசம்பாவில் இருந்து டார்பன் துறைமுகத்திற்கு கடந்த 2010இல் எம்வி ஆஸ்வால்ட் என்ற சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தபோது திடீரென சோமாலிய கடல் கொள்ளையர்கள் அந்த கப்பலை கடத்தினர்.
அதிலிருந்த 15 பேரில் 7 பேரை கடத்தி சென்றனர். கடத்தப்பட்டவர்களில் மும்பையை சேர்ந்த பகதூர் சிங், கேரளாவின் ஜார்ஜ் ஜேக்கப், பாஸ்கரன் நாயர், மகாராஷ்டிராவை சேர்ந்த மஞ்சித் சிங், தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் ஊழியர் டனிஸ்டன் உள்பட பலர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
இவர்களை மீட்க குடும்பத்தினர் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வரை சென்று முறையிட்டனர். மேலும் இவர்களை மீட்க கோரி பொதுமக்கள் சமூக நல அமைப்புகள், மாலுமிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை.
இந்நிலையில் டனிஸ்டன் கடத்தி செல்லப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இதுவரை டனிஸ்டன் மீட்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடியில் அவரது குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.
கடந்த 5ம் தேதி டனிஸ்டன் தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அப்போது அவர் எங்களுக்கு 2 நேர உணவு கூட சரியாக கிடைப்பதில்லை. குடிப்பதற்கு மழை நீர் மட்டுமே கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிணை கைதிகளை விடுவிக்க கோடிக்கணக்கில் பிணை தொகை கேட்டு கடல் கொள்ளையர்கள் இமெயில் மூலம் கப்பல் கம்பெனிக்கு புகைப்படம் அனுப்பி வைத்துள்ளனர். இதில் டனிஸ்டன் உள்பட 7 பேர் உடல் மெலிந்து அழுக்கு படித்த ஆடைகளுடன் காணப்படுவது தெரிகிறது. ஈராக்கில் சிக்கிய நர்சுகளை மீட்டது போல் இவர்களையும் மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.












Click it and Unblock the Notifications