தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். 100வது நாள் போராட்டத்தின்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி கிளம்பினார்கள்.

அண்ணாநகர் பகுதியில் அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 17 வயது சிறுமி, 19 வயது கல்லூரி மாணவர் உள்பட 13 பேர் பலியாகினர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை தூத்துக்குடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் தூப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications