தூத்துக்குடியில் புதிய விமானப்படைத் தளம்.. புதுப்பிக்கப்படுகிறது 2ம் உலகப் போர் விமான நிலையம்
நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகம் வலுத்து வருவதால், தூத்துக்குடியில் புதிய விமான தளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இ்தற்காக இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானப்படை தளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழதத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
முக்கியமாக கடல் மார்க்கமாக எளிதில் ஊடுருவல் நடக்கலாம் என்பதால் கடலோர காவல் படையினரும், மீனவர்களும் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கடலோரங்களில் கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. மேலும் பணகுடி அருகே இஸ்ரோவின் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. விஜயநாராயணம் அருகே கடற்படை தளம் இயங்கி வருகிறது.

இந்த மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு எப்போதும் இருக்கும். இந்த நிலையில் பதன்கோட்டில் கடும் காவலையும் மீறி தாக்குதல் நடந்ததால் இங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அதற்கு தகுந்தபோல் இஸ்ரோ மையத்தை சுற்றி கிளைடர் விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் மத்திய அரசு விமானப்படையின் நவீன ரேடார் சாதனைத்தை அனுப்பி வைத்துள்ளது. மேலும், விமானப்படை தளம் அமைப்பது தொடர்பான ஆய்வுக்காக ஸ்குவாட்ரன் லீடர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். மேலும் ஒரு சுகோய் 30 ரக போர் விமானமும் அப்பகுதியில் வட்டமடித்தது. இந்த விமானம் தாழ்வாக வந்த போது பயங்கர இரைச்சல் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூர், கோவை, அரக்கோணம், சூலூரில் இருப்பது போல இப்பகுதியை மையமாக வைத்து தனி விமானப்படை தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பன்னீர்குளத்தில் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட விமானப்படை தளம் உள்ளது.
இந்த இடத்தை கடந்த 2009ம் ஆணடு அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு சென்றனர். தற்போது இதை புதுப்பித்து அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போல தூத்துக்குடி விமான நிலையத்தை ஓட்டி விமானப்படைக்கு என்று தனியாக படைதளம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ விமானம் பறப்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர்.
ஆக தென் மாவட்டத்தில் விமானப்படை தளம் அமைவது உறுதியாகி வி்ட்டது. முன்பு சுதந்திரத்திற்கு முன்பு மதுரை விமான நிலையத்தை விமானப்படைத் தளமாக ஆங்கிலேய அரசு பயன்படுத்தி வந்தது நினைவிருக்கலாம். பின்னர் அது சிவில் விமான நிலையமாக மாற்றப்பட்டு விட்டது.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications