Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடியில் புதிய விமானப்படைத் தளம்.. புதுப்பிக்கப்படுகிறது 2ம் உலகப் போர் விமான நிலையம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகம் வலுத்து வருவதால், தூத்துக்குடியில் புதிய விமான தளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இ்தற்காக இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானப்படை தளத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழதத்தில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக கடல் மார்க்கமாக எளிதில் ஊடுருவல் நடக்கலாம் என்பதால் கடலோர காவல் படையினரும், மீனவர்களும் உஷாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கடலோரங்களில் கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. மேலும் பணகுடி அருகே இஸ்ரோவின் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. விஜயநாராயணம் அருகே கடற்படை தளம் இயங்கி வருகிறது.

Tuticorin will have an IAF station soon

இந்த மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு எப்போதும் இருக்கும். இந்த நிலையில் பதன்கோட்டில் கடும் காவலையும் மீறி தாக்குதல் நடந்ததால் இங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அதற்கு தகுந்தபோல் இஸ்ரோ மையத்தை சுற்றி கிளைடர் விமானம் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் மத்திய அரசு விமானப்படையின் நவீன ரேடார் சாதனைத்தை அனுப்பி வைத்துள்ளது. மேலும், விமானப்படை தளம் அமைப்பது தொடர்பான ஆய்வுக்காக ஸ்குவாட்ரன் லீடர் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். மேலும் ஒரு சுகோய் 30 ரக போர் விமானமும் அப்பகுதியில் வட்டமடித்தது. இந்த விமானம் தாழ்வாக வந்த போது பயங்கர இரைச்சல் சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூர், கோவை, அரக்கோணம், சூலூரில் இருப்பது போல இப்பகுதியை மையமாக வைத்து தனி விமானப்படை தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பன்னீர்குளத்தில் இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட விமானப்படை தளம் உள்ளது.

இந்த இடத்தை கடந்த 2009ம் ஆணடு அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு சென்றனர். தற்போது இதை புதுப்பித்து அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போல தூத்துக்குடி விமான நிலையத்தை ஓட்டி விமானப்படைக்கு என்று தனியாக படைதளம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ விமானம் பறப்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தனர்.

ஆக தென் மாவட்டத்தில் விமானப்படை தளம் அமைவது உறுதியாகி வி்ட்டது. முன்பு சுதந்திரத்திற்கு முன்பு மதுரை விமான நிலையத்தை விமானப்படைத் தளமாக ஆங்கிலேய அரசு பயன்படுத்தி வந்தது நினைவிருக்கலாம். பின்னர் அது சிவில் விமான நிலையமாக மாற்றப்பட்டு விட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+