தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சுங்கச்சாவடி முற்றுகை... நூற்றுக்கணக்கானோர் கைது

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே சுங்க சாவடிகளை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் ஈடுபட் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களிடம் வழிப்பறி கொள்ளையடிக்கும் சுங்க சாவடிகளை கண்டித்து தமிழகத்தில் உள்ள 41 சுங்க சாவடிகள் முன்பு முற்றுகைப் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று நடைபெறும் என தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்திருந்தார்.

TVK cadres siege Tollgates in TN

தமிழகத்தில் மொத்தம் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும் 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன.

இந்த சாவடிகளை இன்று பண்ருட்டி வேல்முருகன் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சுங்கச் சாவடிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கரூர் மாவட்டம், மணவாசி டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட சென்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலா சிறப்புரையாற்றினார்.

TVK cadres siege Tollgates in TN

அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களை கொள்ளையடிக்கும் பொருட்டு சுங்கச் சாவடிகள் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் அடிப்படை வசதிகள் சுங்கச்சாவடிகளில் ஏதும் இல்லை. ஆதலால் மத்திய அரசின் இந்த சட்ட விரோத கொள்கையை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம்.

ஆந்திர அரசு காட்டுமிராண்டித்தனமாக தமிழர்கள் 20 பேரை சுட்டுக் கொண்டதற்கு வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்த தமிழர்களுக்கு ஆந்திர அரசு தக்க நிவாரணம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+