அப்பாடா வாட்ஸ் அப் முடங்கியது... குடும்பங்களில் 1990கள் திரும்பியது... நெட்டிசன்கள் குசும்பு
வாட்ஸ் அப் செயலி முடங்கியது குறித்த ட்வீட்டுகளின் தொகுப்பு.
Recommended Video

சென்னை: வாட்ஸ் அப் என்கிற ஒரு தகவல் தொடர்பு செயலி சிறிது நேரம் முடங்கியது. இதை கொண்டாடுகிற மனநிலையிலும் நெட்டிசன்கள் இருக்கின்றனர்.
உலகம் முழுவதும் இன்று திடீரென வாட்ஸ் அப் திடீரென முடங்கியது. வாட்ஸ் அப் முடங்கிய போது நீங்கள் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என யூகித்து ட்விட்டரில் 'வெச்சு செய்கிறார்கள்' நெட்டிசன்கள்.
அதுவும் விதம் விதமான ரியாக்சன்களை முதலில் போட்டுவந்த நெட்டிசன்கள் இப்போது தத்துவ மழையெல்லாம் பொழியத் தொடங்கிவிட்டனர். இதோ நம்ம கண்ணில் பட்ட சில ட்வீட்டுகள்.
|
திரும்பியது அந்த காலம்
வாட்ஸ் அப் முடங்கியதால் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் 10 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து கொள்ளும் சூழ்நிலையை திரும்பியதாம்.
|
தொலைந்த நாட்கள்
1990களைப் போல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசி மகிழ்வர். நாம் அன்றாட வாழ்க்கையில் தொலைத்துவிட்ட ஒன்று என்கிறார் இவர்.
|
நிம்மதி நிம்மதி
அப்பாடா..வாட்ஸ் அப் குரூப்களை மேய்க்கும் அட்மின்களுக்கு கொஞ்ச நேரம் நிம்மதி என்கிறது இந்த பதிவு.
|
வாட்ஸ் அப் இல்லைன்னா..
வாட்ஸ் அப் முடங்கிடுச்சாம்.. செல்போனுக்கு இதுதான் கதி என்கிறது இப்பதிவு.












Click it and Unblock the Notifications