Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்ட்ரல் குண்டுவெடிப்பு: ஓராண்டாகியும் ஒருவரும் கைதில்லை... கண்ணீரில் ஸ்வாதி குடும்பம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றோடு ஓராண்டாகி விட்டது. ஆனாலும் இந்த வழக்கில் துப்புத் துலங்கவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.

கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி காலை பெங்களூரில் இருந்து குவாஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. காலை 7.15 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் ரயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் ஒன்றன்பின் ஒன்றாக 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திரமாநிலம் குண்டூரைச் சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.

Twin bomb blasts at Chennai railway station completes one year

இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணைக்கு உத்தரவிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த தமிழக அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக போலீஸார், பெங்களூரு சென்று விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் விசாரணை முடிவுக்குவரும் என்றும் தெரிவித்தனர். ஆனால், சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இளம் பெண் ஸ்வாதியை இழந்த துயரில் இருந்து மீளவில்லை அவரது குடும்பம். ஸ்வாதியின் தந்தை பரிசூரி ராமகிருஷ்ணன், தாய் காமாட்சி தேவி ஆகியோர் இன்னமும் மகளை இழந்த சோகத்தில் இருந்து மாறவில்லை.

Twin bomb blasts at Chennai railway station completes one year

பள்ளியில் சுவாதிதான் முதல் மாணவியாம். எம்.டெக்கில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, வேலைக்குச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய தலைமை பொறியாளர் பதவி, உடனே கிடைத்தது என்கிறார் சுவாதியின் தாயார். என் மகள் வாழ்க்கையில் எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது. மரணமும் கூட'' என்று கண்ணீர் விடுகிறார் தாயார் காமாட்சி தேவி.

Twin bomb blasts at Chennai railway station completes one year

ஸ்வாதி இறந்த பிறகு தமிழகத்தில் இருந்து பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, ‘உங்கள் பெண் தெய்வத்தின் குழந்தை. வெடிகுண்டு வெடிக்கத் தொடங்கியவுடனேயே உங்கள் மகள் அந்த வெடிகுண்டுவின் மீது குப்புற விழுந்துவிட்டாள். குண்டு மொத்தமும் அவரது நெஞ்சுக்குள் புதைந்து வெடித்திருக்கிறது. இல்லையெனில் அந்தப் பெட்டியில் இன்னும் நிறைய பேர் இறந்திருப்பார்கள்' என்றார். ஆமாம், ஸ்வாதி தெய்வத்தின் குழந்தைதான்!'' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+