சென்ட்ரல் குண்டுவெடிப்பு: ஓராண்டாகியும் ஒருவரும் கைதில்லை... கண்ணீரில் ஸ்வாதி குடும்பம்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றோடு ஓராண்டாகி விட்டது. ஆனாலும் இந்த வழக்கில் துப்புத் துலங்கவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.
கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி காலை பெங்களூரில் இருந்து குவாஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. காலை 7.15 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் ரயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் ஒன்றன்பின் ஒன்றாக 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திரமாநிலம் குண்டூரைச் சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணைக்கு உத்தரவிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த தமிழக அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக போலீஸார், பெங்களூரு சென்று விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் விசாரணை முடிவுக்குவரும் என்றும் தெரிவித்தனர். ஆனால், சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இளம் பெண் ஸ்வாதியை இழந்த துயரில் இருந்து மீளவில்லை அவரது குடும்பம். ஸ்வாதியின் தந்தை பரிசூரி ராமகிருஷ்ணன், தாய் காமாட்சி தேவி ஆகியோர் இன்னமும் மகளை இழந்த சோகத்தில் இருந்து மாறவில்லை.

பள்ளியில் சுவாதிதான் முதல் மாணவியாம். எம்.டெக்கில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, வேலைக்குச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய தலைமை பொறியாளர் பதவி, உடனே கிடைத்தது என்கிறார் சுவாதியின் தாயார். என் மகள் வாழ்க்கையில் எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது. மரணமும் கூட'' என்று கண்ணீர் விடுகிறார் தாயார் காமாட்சி தேவி.

ஸ்வாதி இறந்த பிறகு தமிழகத்தில் இருந்து பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, ‘உங்கள் பெண் தெய்வத்தின் குழந்தை. வெடிகுண்டு வெடிக்கத் தொடங்கியவுடனேயே உங்கள் மகள் அந்த வெடிகுண்டுவின் மீது குப்புற விழுந்துவிட்டாள். குண்டு மொத்தமும் அவரது நெஞ்சுக்குள் புதைந்து வெடித்திருக்கிறது. இல்லையெனில் அந்தப் பெட்டியில் இன்னும் நிறைய பேர் இறந்திருப்பார்கள்' என்றார். ஆமாம், ஸ்வாதி தெய்வத்தின் குழந்தைதான்!'' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications