சென்ட்ரல் குண்டுவெடிப்பு: ஓராண்டாகியும் ஒருவரும் கைதில்லை... கண்ணீரில் ஸ்வாதி குடும்பம்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்து இன்றோடு ஓராண்டாகி விட்டது. ஆனாலும் இந்த வழக்கில் துப்புத் துலங்கவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.
கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி காலை பெங்களூரில் இருந்து குவாஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தது. காலை 7.15 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் ரயிலின் எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் ஒன்றன்பின் ஒன்றாக 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஆந்திரமாநிலம் குண்டூரைச் சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) விசாரணைக்கு உத்தரவிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த தமிழக அரசு, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக போலீஸார், பெங்களூரு சென்று விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் விசாரணை முடிவுக்குவரும் என்றும் தெரிவித்தனர். ஆனால், சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இளம் பெண் ஸ்வாதியை இழந்த துயரில் இருந்து மீளவில்லை அவரது குடும்பம். ஸ்வாதியின் தந்தை பரிசூரி ராமகிருஷ்ணன், தாய் காமாட்சி தேவி ஆகியோர் இன்னமும் மகளை இழந்த சோகத்தில் இருந்து மாறவில்லை.

பள்ளியில் சுவாதிதான் முதல் மாணவியாம். எம்.டெக்கில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, வேலைக்குச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய தலைமை பொறியாளர் பதவி, உடனே கிடைத்தது என்கிறார் சுவாதியின் தாயார். என் மகள் வாழ்க்கையில் எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது. மரணமும் கூட'' என்று கண்ணீர் விடுகிறார் தாயார் காமாட்சி தேவி.

ஸ்வாதி இறந்த பிறகு தமிழகத்தில் இருந்து பேசிய ஒரு போலீஸ் அதிகாரி, ‘உங்கள் பெண் தெய்வத்தின் குழந்தை. வெடிகுண்டு வெடிக்கத் தொடங்கியவுடனேயே உங்கள் மகள் அந்த வெடிகுண்டுவின் மீது குப்புற விழுந்துவிட்டாள். குண்டு மொத்தமும் அவரது நெஞ்சுக்குள் புதைந்து வெடித்திருக்கிறது. இல்லையெனில் அந்தப் பெட்டியில் இன்னும் நிறைய பேர் இறந்திருப்பார்கள்' என்றார். ஆமாம், ஸ்வாதி தெய்வத்தின் குழந்தைதான்!'' என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications