அத்தானையும், அக்காளையும் கொன்று விட்டு மைத்துனர் தப்பி ஓட்டம்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே தனது அக்காவையும், அவரது கணவரையும் வெட்டிக் கொன்று விட்டு மைத்துனர் தலைமறைவாகி விட்டார்.
நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அடுத்த மைபாறையைச் சேர்ந்தவர் ஜெயராமன் (65). இவரது மனைவி தனலட்சுமி (55). தனலட்சுமியின் தம்பி முத்தாழ்வார்.

இவருக்கும் சகோதரி தனலக்ஷ்மியின் குடும்பத்திற்கும் சொத்து தொடர்பான முன் பகை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சகோதரி கணவரிடம் இது குறித்து முத்தாழ்ள்வார் தகராறு செய்துள்ளார். தகாராறு முற்றியதில் முத்தாழ்வார் சகோதரியையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினார்.
உயிருக்கு போராடி சிறிது நேரத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜெயராமன், தனலட்சுமி இருவரும் இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications