அனிதாவின் தற்கொலை அவமானம்!
மருத்துவர் கனவு தகர்க்கப்பட்டதால் மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலை குறித்து டுவிட்டரில் கருத்துகள் பகிரப்பட்டுள்ளது.
சென்னை: மருத்துவர் கனவு நனவாகாததால் மனமுடைந்த மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் குறித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமம் அனிதாவின் சொந்த ஊர். அவரது தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார்.
ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அதில் கட்-ஆஃப் மதிப்பெண் 196.7. எனினும் நீட் தேர்வு அவருக்கு கைகொடுக்காததால் அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
|
அனிதாவின் தற்கொலை அவமானம்
தமிழகத்துக்கு மிகவும் சோகமான தினம். கல்வித் துறையில் முன்னேற்ற அடைந்துள்ள நிலையில் அனிதாவின் மரணம் மாநிலத்துக்கு அவமானமாகும்.
|
நாட்டில் நிலை அப்படி
சூழ்நிலையை யாரும் கண்டுகொள்ளவில்லை. உனது மரணமும் கடந்துபோகும். நாட்டில் நிலை அப்படி?
|
அப்பாவியின் உயிர் பாவிகளால்...
உயிரை காப்பாற்றும் டாக்டர் படிப்பு படிக்க நினைத்த ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது பாவிகளால் !
|
வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது...
தமிழிசை , H . ராஜா, தயவுசெய்து அனிதா தற்கொலை குறித்து கருத்து சொல்லாதீர்கள்.. அது வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றுவது போல...












Click it and Unblock the Notifications