சென்னை: மசாஜ் சென்டரில் விபச்சாரம் செய்த 2 பேர் கைது
சென்னை: சென்னையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நகரில் அடுக்கு மாடி குடியிருப்பு மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி விபசார தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டனர்.
தியாகராயநகர் பகுதியில் போலீசார் கண்காணித்த போது, சவுந்தர்ராஜன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பது தெரிந்தது. அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட மேரி என்ற எல்.ஐ.சி. மேரியை கைது செய்தனர். ஆந்திர அழகியை மீட்டனர்.
எல்.ஐ.சி. முகவராக இருந்த மேரி மீது 1997-ம் ஆண்டு முதல் விபசார வழக்குகள் உள்ளது. விபசார பிரிவு, சி.பி.சி.ஐ.டி. பிரிவுகளில், வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெளி மாநில அழகிகளை சொந்த வீட்டிலேயே தங்க வைத்து எல்.ஐ.சி. வாடிக்கையாளர் மூலம் கஸ்டமர்களை வரவழைத்து விபசாரம் செய்து வந்தார்.
இதே போல் அடையாறு இந்திரா நகரில் உள்ள மசாஜ் சென்டரில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த பாபுவை கைது செய்தனர். மணிப்பூரை சேர்ந்த அழகிகள் 3 பேரை மீட்டனர்.












Click it and Unblock the Notifications