For Daily Alerts
Just In
நாகை அருகே மின்சாரம் தாக்கி அண்ணன் தம்பி பரிதாபமாக பலி
நாகை அருகே மின்சாரம் தாக்கியதில் அண்ணன் தம்பி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை: கீழ்வேளூரில் மின்சாரம் தாக்கியதில் அண்ணன் தம்பி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்தவர்கள் கணேசன், ராஜன். சகோதரர்களான இவர்கள் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது சேனல் சரியாக தெரியவில்லை என கேபிள் ஒயரை அட்ஜஸ்ட் செய்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி அண்ணன் தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Two Brothers dead in Keezhvellore Nagai district after electricity shocks.
Story first published: Tuesday, May 8, 2018, 9:41 [IST]