சென்னை பெருங்களத்தூரில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து:கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல் நசுங்கி பலி
சென்னை பெருங்களத்தூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெருங்களத்தூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை பெருங்களத்தூரில் இரண்டு கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சதீஷ், பார்த்திபன் ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் குந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications