தீபாவளியன்று சோகம்.. கால்வாயில் டைவ் அடித்துக் குளித்தவர் உள்பட 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: செங்கோட்டை அருகே தீபாவளி தினத்தன்று நடந்த இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தென்காசி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அசன். இவர் நெல்லை சதக் அப்துல்லா கல்லூரியில் வருகிறார். இவர் நேற்று தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் செங்கோட்டை அருகேயுள்ள குண்டாறு நீர் தேக்கத்தில் குளிக்க சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் குளித்துகொண்டிருந்த போது பயங்கர இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த சமயத்தில் அசன் மறுகால் பகுதியிலிருந்து டைவ் அடித்துள்ளார். அப்போது வனப் பகுதியில் இடியும் மின்னலும் வரவே இவரது கவனம் மாறி, நிலை தடுமாறி ஆழமான கல்பாறை பகுதியில் விழுந்துள்ளார். அதில் நெஞ்சில் அடிப்பட்டு நீரில் மூழ்கி பலியானார்.

செங்கோட்டை தீ அணைப்பு மற்றும் மீட்பு துறையினர் அவரது உடலை வெகு நேரம் தேடி மீட்டனர்.

செங்கோட்டை மேலூர் சங்கலி மாடன் கொவில் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவர் வயல் வெளியில் நேற்றுமாலை மாடு மேய்த்து கொண்டிருந்தபோது இடி,மின்னல்,தாக்கி பலியானார்.

தீபாவளி நாளில் இப்பகுதியில் இருவர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+