For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கல்பட்டு அருகே இடிதாக்கியதில் 2 சிறுவர்கள் பலி

Google Oneindia Tamil News

சென்னை: செங்கல்பட்டு அருகே இடி தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கத்தரி வெயில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மேகமூட்டமான வானிலையும் காணப்படுகிறது. தமிழகத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 8 பேர் வரை பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று சென்னை அருகே செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் திருக்கச்சூரில் இடி தாக்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.

இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இன்றும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.

English summary
Two persons died near Chengalpattu in thunder in yesterday's rainfall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X