செங்கல்பட்டு அருகே இடிதாக்கியதில் 2 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: செங்கல்பட்டு அருகே இடி தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கத்தரி வெயில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மேகமூட்டமான வானிலையும் காணப்படுகிறது. தமிழகத்தில் பெய்த கனமழைக்கு இதுவரை 8 பேர் வரை பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று சென்னை அருகே செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் திருக்கச்சூரில் இடி தாக்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பிருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இன்றும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.












Click it and Unblock the Notifications