"ஒரே நாளில் இரண்டு தேர்வு எப்படி எழுதறது?”- குமுறும் பட்டதாரிகள்
சென்னை: தமிழகத்தில் செட் மற்றும் சி.டி.இ.டி ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வெழுத உள்ள ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு தேர்வினையாவது மாற்றி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வான சி.டி.இ.டி தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.

2016 ஆம் ஆண்டுக்கான முதல் சி.டி.இ.டி. தேர்வு வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுத் தேதியை பல மாதங்களுக்கு முன்னரே சி.பி.எஸ்.இ அறிவித்துவிட்டது.
இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமானது கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வான செட் அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இந்தத் தேர்வு இந்த ஆண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த செட் தேர்வும் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது லட்சக்கணக்கான முதுநிலைப் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செட் தேர்வில் நூலக அறிவியல் உள்பட 5 க்கும் மேற்பட்ட பாடங்கள் விடுபட்டுள்ளதால் அந்தப் பாடங்களில் தகுதி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சோகத்தில் உள்ளனர்.
இந்த தேர்வுகளில் சி.டி.இ.டி தேர்வு தேதி முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளதால் செட் தேர்வு நாளை வேறொரு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications