"ஒரே நாளில் இரண்டு தேர்வு எப்படி எழுதறது?”- குமுறும் பட்டதாரிகள்
சென்னை: தமிழகத்தில் செட் மற்றும் சி.டி.இ.டி ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வெழுத உள்ள ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு தேர்வினையாவது மாற்றி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசுப் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வான சி.டி.இ.டி தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.

2016 ஆம் ஆண்டுக்கான முதல் சி.டி.இ.டி. தேர்வு வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுத் தேதியை பல மாதங்களுக்கு முன்னரே சி.பி.எஸ்.இ அறிவித்துவிட்டது.
இந்த நிலையில், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகமானது கல்லூரிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான மாநில அளவிலான தகுதித் தேர்வான செட் அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இந்தத் தேர்வு இந்த ஆண்டுதான் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த செட் தேர்வும் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது லட்சக்கணக்கான முதுநிலைப் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள செட் தேர்வில் நூலக அறிவியல் உள்பட 5 க்கும் மேற்பட்ட பாடங்கள் விடுபட்டுள்ளதால் அந்தப் பாடங்களில் தகுதி பெற்ற ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சோகத்தில் உள்ளனர்.
இந்த தேர்வுகளில் சி.டி.இ.டி தேர்வு தேதி முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளதால் செட் தேர்வு நாளை வேறொரு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications