வெள்ளத்தில் வந்த விருந்தாளிகள்... தாம்பரத்தில் ஒரு வீட்டில் சிக்கிய 2 மலைப்பாம்புகள்!
சென்னை: சென்னை தாம்பரத்தில் மழை வெள்ளம் புகுந்த வீட்டில் இருந்து இரண்டு மலைப்பாம்புகள் பிடிப்பட்டுள்ளன.
கடந்த 1 மற்றும் 2ம் தேதி கொட்டிய கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறின. படகுகள் மூலம் மக்கள் வீடுகளில் இருந்து மீட்கப் பட்டனர்.
ஒருபுறம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருக்க, மறுபுறம் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு, வீடுகளுக்குள் குடியேறின.

இந்நிலையில், தற்போது வெள்ள நீர் வடிந்து விட்ட நிலையில், வீடுகளுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். வெள்ள நீர் புகுந்ததால் சேறு அப்பிய வீடுகளை சுத்தப் படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளான மேற்கு தாம்பரம் சி.டி.ஓ. காலனியில் வீடொன்றைச் சுத்தம் செய்த போது, ஒரு அறையில் 2 மலைப்பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அந்த மலைப்பாம்புகளை பிடித்து வீட்டில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். ஒரு பாம்பு 2 அடி நீளமும், மற்றொரு பாம்பு ஒரு அடி நீளமும் காணப்பட்டது.
பின்னர் அந்த இரண்டு பாம்புகளும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன.
பிடிப்பட்ட இரண்டு பாம்புகளும் அரிய வகை இந்திய மலைப்பாம்பு இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications