வெள்ளத்தில் வந்த விருந்தாளிகள்... தாம்பரத்தில் ஒரு வீட்டில் சிக்கிய 2 மலைப்பாம்புகள்!
சென்னை: சென்னை தாம்பரத்தில் மழை வெள்ளம் புகுந்த வீட்டில் இருந்து இரண்டு மலைப்பாம்புகள் பிடிப்பட்டுள்ளன.
கடந்த 1 மற்றும் 2ம் தேதி கொட்டிய கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறின. படகுகள் மூலம் மக்கள் வீடுகளில் இருந்து மீட்கப் பட்டனர்.
ஒருபுறம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருக்க, மறுபுறம் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வெள்ள நீரில் அடித்து வரப்பட்டு, வீடுகளுக்குள் குடியேறின.

இந்நிலையில், தற்போது வெள்ள நீர் வடிந்து விட்ட நிலையில், வீடுகளுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். வெள்ள நீர் புகுந்ததால் சேறு அப்பிய வீடுகளை சுத்தப் படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடுமையான வெள்ள பாதிப்புக்கு உள்ளான மேற்கு தாம்பரம் சி.டி.ஓ. காலனியில் வீடொன்றைச் சுத்தம் செய்த போது, ஒரு அறையில் 2 மலைப்பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அந்த மலைப்பாம்புகளை பிடித்து வீட்டில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். ஒரு பாம்பு 2 அடி நீளமும், மற்றொரு பாம்பு ஒரு அடி நீளமும் காணப்பட்டது.
பின்னர் அந்த இரண்டு பாம்புகளும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன.
பிடிப்பட்ட இரண்டு பாம்புகளும் அரிய வகை இந்திய மலைப்பாம்பு இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications