சென்னை விஜிபி பொழுது போக்கு பூங்கா ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து தாய், மகன் படுகாயம்!
சென்னை விஜிபி பொழுது போக்கு பூங்காவில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து தாய் மற்றும் மகன் படுகாயம் அடைந்துள்ளனர்
சென்னை: சென்னை விஜிபி பொழுது போக்கு பூங்காவில் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்தா தாய், மகன் படுகாயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னையில் தீம் பார்க் பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. கிழக்கக் கடற்கரை சாலையில் உள்ள விஜிபி பொழுது போக்கு பூங்காவிற்கு பொதுமக்கள் சென்று உற்சாகமாக விளையாடி வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பிரம்மாண்ட ராட்டினத்தில் ஏறி சுற்றினர். அப்போது ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து தாய் பச்சையம்மாள் மற்றும் மகன் சபரிநாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த தாய் மற்றும் மகன் இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விஜிபி பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து உயிர் பலியாவதும் படுகாயமடைவதும் தொடர்ந்து நிகழ்கிறது.கடந்த ஆண்டு பெண் ஒருவர் ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications