ஒரே நாளில் 2 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை... விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்: சென்னை ஐஐடி
சென்னை : சென்னை ஐஐடியில் ஒரே நாளில் 2 பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று கல்வி நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் கணேசனின் மனைவி விஜயலட்சுமி. இவர்கள் ஐஐடி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது 2வது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இதனால் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இருவருக்கும் தகராறு முற்றியது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விஜயலட்சுமியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இத்தற்கொலை சம்பவம் நிகழ்ந்த அதே குடியிருப்பு அருகே ஐஐடி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் அங்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டவர் புதுச்சேரியை சேர்ந்த பாண்டியன் மனைவி மகேஸ்வரி என்றும், ஐஐடியில் தத்துவம் படித்து வருகிறார் என்றும் தெரியவந்தது.
இத்தற்கொலைகள் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை ஐஐடி வளாகத்தில் 2 பெண்கள் ஒரே நாளில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலீசார் விசாரணைக்கு ஐஐடி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications