தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. உதயக்குமார்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது, சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் உதயக்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாகத அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஒன்றிய அரசு ஓராணை பிறப்பிக்கும்; ஒருவர்கூட அருகே வர முடியாது. பிரதமர் மோடி பெயரில் பெரிதாகக் கொண்டாடுங்கள் என்றெல்லாம் கூவித் திரிந்தார்கள் சிலர். தற்போது உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறதாம். நல்ல வேடிக்கை.
வண்ணப் பொடிகள் மக்களுக்கும் சூழலுக்கும் பாதகமானவை; எனவே ஹோலி கொண்டாடக்கூடாது, பட்டாசுகளும் காற்றை மாசுபடுத்தி, சுவாச நோய்களை உருவாக்குகின்றன. எனவே தீபாவளி கொண்டாடக்கூடாது என்று இந்த உச்ச நீதிமன்றம் சொல்லுமா?
மிருகங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று தமிழர்களுக்கு யாரும் வகுப்பெடுக்கவேண்டியத் தேவையில்லை. நமது பண்பாடு, கலாச்சார வி்ஷயங்களை நாம்தான் தேர்வு செய்ய வேண்டுமே, முடியுமே தவிர ஒன்றிய அரசோ அல்லது ஒன்றுக்கும் உதவாத வீணர்களோ அல்ல.
இயற்கை விவசாயம், நஞ்சில்லா உணவு என்று சிந்திக்கத் துவங்கியிருக்கும் நமக்கு மாடுகளும், சாணமும் முக்கியமானவை. மாடுகளைக் கொண்டாடும் கலாச்சார நிகழ்வுகளும் இன்றியமையாதவை. மாடுகளை இம்சிக்காத நிலையைத் தொடர்ந்து பேணி, அவைகளைப் போற்றி வளர்க்கும் பண்பைத் தக்கவைத்து, ஜல்லிக்கட்டை நாம் கொண்டாடுவோம். யார் வந்து தடுக்கிறார்கள் என்று பார்ப்போம். உரிமைகள் யாரும் யாருக்கும் தருவனவல்ல. உரிமைப்பட்டோர் தாமாகவே எடுத்துக் கொள்பவை.
சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications