புதிய அணு உலைகளை தடுத்து நிறுத்துங்கள்: கருணாநிதியை சந்தித்து உதயகுமார் வேண்டுகோள்
சென்னை: தமிழகத்தில் புதிதாக அணு உலைகளை அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளை எதிர்த்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் அப்பகுதி பொது மக்கள் ஆண்டுக் கணக்கில் போராடினர். இருப்பினும் அணு உலைகள் செயல்படத் துவங்கின.
இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகளை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில் உதயகுமார் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பிறகு உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் புதிதாக அணு உலைகளை அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2 புதிய அணு உலைகள் அமைக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுக்க வேண்டும் என்று நான் திமுக தலைவர் கருணாநிதியை கேட்டுக் கொண்டேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!











Click it and Unblock the Notifications