பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்.. இதுதான் எமது கொள்கை- உதயகுமார்
இடிந்தகரை: எளிய மக்கள் கட்சி அதாவது ஆம் ஆத்மி கட்சியின் கொள்கையை வெளியிட்டுள்ளார் உதயகுமார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி...
எளிய மக்கள் கட்சி (எ.ம.க.)...எமக்கான கொள்கை - பசுமை மார்க்சியம், காந்தியம், தமிழ்த் தேசியம்

சூழலியல் அறிவு...சுற்றுச்சூழல் பாதுகாப்பு
அதிகாரப் பரவல்...பங்கேற்பு சனநாயகம்
சமூக நீதி...சம வாய்ப்பு
அறவழி...மென்முறை
மையப்படுத்தப்படாமை
பெண் விடுதலை
வேற்றுமை போற்றல்
தனிமனித, ஒட்டுமொத்த பொறுப்புணர்வு
வருங்காலச் சிந்தனை
கூட்டுறவு போற்றும் சமூகம் சார்ந்த மாற்றுப் பொருளியல்
இயற்கையை அழிக்காத வளங்குன்றா வளர்ச்சி முறை
மாசு படுத்தாத தொழில்-வேளாண் கொள்கை
சிறு நடுத்தரத் தொழில்கள்
இயற்கை வேளாண்மை
மாற்று எரிசக்தி கொள்கை
மாற்று தொழில்நுட்பங்கள்
நீடித்த நிலைத்த வளர்ச்சி
தேசிய இனச் சமூக மாற்றுக் கொள்கைகள்
மரபு சார்ந்த மக்கள் அமைப்புக்கள்
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி
உலகமயப் பொருளியலுக்கு எதிராக தேசியங்களின் பொருளியல்
உலகமயம் திணிக்கும் ஒற்றைத்தன்மைக்கு எதிராக தேசியங்களின் பன்மை
தமிழர் அறம் சார்ந்த அரசியல், வாழ்வியல்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
இதுதான் உதயகுமார் தனது கட்சியின் கொள்கையாக பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாகும்.












Click it and Unblock the Notifications