அடித்து உதைத்து அழி மதி செய்த சசிகலா.. உதயகுமாரன் கடும் பாய்ச்சல்
மாணவர்களை அடித்து உதைத்து அழி மதி செய்த ஆளும் கட்சியின் தலைவராக உள்ள சசிகலா ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க சுப. உதயகுமாரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கி வைக்கக் கூடாது. எந்த தார்மீக அடிப்படையில் அவர் இதை ஏற்க விரும்புகிறார் என்று பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு:
அலங்காநல்லூர் சல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தொடங்கிவைக்கக் கூடாது. போராடிய மாணவர்களை, இளைஞர்களை, மீனவர்களை, பொதுமக்களை அடித்து, உதைத்து, அவமதித்து, அழிமதி செய்து, அவர்கள் மீது பொய் வழக்கும் போட்ட ஆளும் கட்சியின் பொதுச்செயலாளர் எந்த தார்மீக அடிப்படையில் இந்தப் பொறுப்பை ஏற்க விரும்புகிறார்?
அலங்காநல்லூர் மக்கள் அவர்களுக்காக, தமிழினத்திற்காகப் போராடிய தமிழ் மாணவர்களை, இளைஞர்களை அவமதிக்கக் கூடாது. ஒரு தமிழ் மாணவியை வைத்து இந்த விழாவைத் துவங்கி வையுங்கள். வையகம் உங்களைப் போற்றும்.
தகுதியற்றவர்கள், துரோகிகளுக்கு அந்தப் பெருமையைக் கொடுத்தால், வையகம் உங்களைத் தூற்றும். அலங்காநல்லூர் தமிழினத்தின் அடங்காநல்லூராக இருக்கட்டும் என்று கூறியுள்ளார் உதயகுமாரன்.












Click it and Unblock the Notifications