Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் நேர்மையானவன்... பணம் வாங்கிக் கொண்டு போராடவில்லை!- கூடங்குளம் உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

கூடங்குளம்: அணு உலைக்கு எதிரானப் போராட்டத்திற்கு அமெரிக்காவில் இருந்து நிதி வழங்கப்பட்டதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள உதயகுமார், தான் நேர்மையானவர் என விளக்கமளித்துள்ளார்.

அண்மையில் உளவு அமைப்பான ஐ.பி, பிரதமர் அலுவலகத்துக்கு என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு அறிக்கை அனுப்பியிருந்தது. அதில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் பெயரைக் குறிப்பிட்டு அமெரிக்காவிடம் இருந்து அவர் பணம் பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தது. இதனால், பணம் பெற்றுக் கொண்டு தான் உதயகுமார் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டாரா என சர்ச்சை உண்டானது.

மேலும், இந்தியாவின் வளர்ச்சியைக் குலைக்கும் வகையில் இந்தியாவில் சுமார் 65 அரசு சாரா அமைப்புகளுக்கு மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதியுதவி செய்வதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு கூட்டமைப்பு தலைவர் ஆன்டன் கோமஸ், ‘3 ஆண்டுகளாக உதயகுமார் இடிந்தகரையில் இருந்த போது மக்கள் பணத்தை தான் போராட்டத்துக்கு செலவு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து அவருக்கு பணம் வந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அவரது தனிப்பட்ட பிரச்சினை. அதில் தவறு இருந்தால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய உளவுத் துறையின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து விளக்கமளித்துள்ளார் உதயகுமார்.

இந்திய உளவுத் துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இடிந்தகரையில் இருந்தபடி கலந்து கொண்டார் உதயகுமார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஆய்வு கட்டுரைகள் மட்டும்...

ஆய்வு கட்டுரைகள் மட்டும்...

அமெரிக்காவின் ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் கிர்வான் இன, நிற ஆய்வு நிறுவனத்துக்காக இந்தியாவில் இருந்தபடி நான் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினேன்.

ஆய்வு மேற்கொள்ளவில்லை...

ஆய்வு மேற்கொள்ளவில்லை...

உலகமயமாக்கல், இன வேறுபாடுகள், சிறுபான்மை அரசியல், பிரிக்ஸ் அமைப்பு போன்ற தலைப்புகளில் கட்டுரை எழுதினேன். ஆனால், அணுசக்தி பற்றியோ, வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவோ நான் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

நேர்மையானவன்...

நேர்மையானவன்...

நான் நேர்மையானவன். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு போராடவில்லை என்பதை பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன்.

சட்டப்படி நடவடிக்கை...

சட்டப்படி நடவடிக்கை...

இது பற்றி சட்ட நடவடிக்கை எடுப்பேன். உளவுத் துறையின் அறிக்கையால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது''என்றார் உதய குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+