வெடிகுண்டில் சந்தேகத்திற்கு உரிய சங்கேத வார்த்தைகள் – நிபுணர்கள் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பெல் நிறுவன வணிக வளாகத்தில் இருந்து நேற்று அதிகாலை வெடி பொருள் கண்டெடுக்கப்பட்டது.

மர்ம நபர்கள் யாரோ இதனை இங்கு வீசி சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

சென்னையில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் வெடிபொருளை மீட்டு பூட்டுதாக்கு ஏரியில் வைத்து செயல் இழக்க செய்தனர்.

எந்த ரகம்? :

வெடிபொருளை வெடிகுண்டு நிபுணர்கள் சென்னைக்கு கொண்டு சென்று எந்த ரகத்தை சேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கேத வார்த்தைகள்:

வெடிமருந்து பாட்டிலில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் எழுதப்பட்டு இருந்த சங்கேத வார்த்தைகளா என போலீசார் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

சந்தேகத்துக்குரிய எண்கள்:

வெடிகுண்டு நிபுணர்கள் அதனை சோதனை செய்த போது அதில் ஒரு ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஸ்டிக்கரில் ஆங்கிலத்தில் இ.எம்.ஐ.எல்.ஐ.ஏ. என்ற எழுத்துக்களும் அதன் அடியில் சில எண்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சமூக விரோதிகள்:

இவை அந்த பாட்டிலை வைத்த சமூக விரோத சக்திகளின் சங்கேத வார்த்தையாகவும் இருக்கலாம் என சந்தேகம் போலீசாருக்கு நிலவுகிறது.

தீவிரவாதிகள் சதி:

அந்த சங்கேத வார்த்தைகளின் அடிப்படையில் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.எனவே இது தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்குமா? எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

போலீசார் விசாரணை:

இதுகுறித்து டி.எஸ்.பி. லாவண்யா தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+