தமிழகத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின் வெட்டு வந்தாச்சு..!
சென்னை: தமிழகத்தில் தேர்தலும், கோடையும் ஒரே நேரத்தில் மக்களை நெருங்கி வருகின்ற நிலையில் மூன்றாவது தாக்குதலாக, முன் அறிவிப்பில்லாத பவர் கட் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பல இடங்களில் திடீரென்று ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என்றும் அல்லது தொடர்ச்சியாக அரைமணிக்கொருமுறை விட்டு விட்டும் பவர் கட் ஆகி வருகின்றது.
கடந்த வாரத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வருகின்ற இந்த மின்சார பிரச்சினைக்கு சரியான அறிவிப்புகளோ, காரணங்களோ இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை.

மதிய வேளைகளில் மட்டுமே இந்த பவர் கட் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் தலைதூக்கியுள்ளது. மேலும், இரவு நேரங்களிலும் மின்சாரம் திடீரென்று தடைப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது அறிவிக்கப்படாத மின்வெட்டா அல்லது மின் விநியோகத்தில் பிரச்சினையா என்று தெரியவில்லை.வழக்கம் போல மின்வாரியம் இதுகுறித்து இதுவரை விளக்கம் தராமலேயே உள்ளது.












Click it and Unblock the Notifications