2 உசுரா இருந்த உஷா பலி: இது தான் தமிழக அரசின் மகளிர் தின பரிசா?
Recommended Video

திருச்சி: திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் அராஜகத்தால் கர்ப்பிணி பெண் பலியானது குறித்து அறிந்து மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ராஜா(40) என்பவர் தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை பார்க்கிறார். அவர் மனைவி உஷா(36). திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் உஷா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் ஆனார்.
ராஜா தனது மனைவியுடன் பைக்கில் நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சி நோக்கி வந்தார். ஹெல்மெட் அணியாததால் அவரது பைக்கை தனது ஜீப்பில் துரத்தினார் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ். பைக்கை வழிமறித்து அவர் எட்டி உதைத்தில் ராஜா, உஷா இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த வேன் மோதி உஷா பலியானார். இது குறித்து அறிந்த பொதுமக்கள் கோபம் அடைந்துள்ளனர்
|
கர்ப்பிணி
பலாத்காரம், கொலை செய்பவர்களை சும்மாவிட்டுவிட்டு, ஹெல்மெட் அணியாத கர்ப்பிணியை துரத்திக் கொல்லும் நாட்டில் நாம் வாழ்கிறோம். பெண்கள் அமைப்புகள் ஏதாவது குரல் கொடுக்கிறதா? சிம்பு பாடுவதற்காக மாதர் சங்கம் வெயிட்டிங் என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
|
சிலை
உயிரே இல்லா பெரியார் சிலைக்கு பேசும் அரசியல்வாதிகள், இரண்டு உயிரா இருந்த திருச்சி உஷாவுக்கு பேச வாய் வரலையா? ஓட்டு மட்டும் தான் உங்கள் குறியா? மக்கள் நலன் உங்களுக்கு முக்கியம் இல்லையா? பெரியார் இப்போ இருந்தால் உங்களை தன் தடியால் அடித்திருப்பார்.
|
கண்டிப்பு
திருச்சி உஷா பரிதாபமாக பலியானது குறித்து அறிந்த நடிகரும், ச.ம.க. தலைவருமான சரத்குமார் தனது கடும் கண்டனத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
|
பரிசு
உஷா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தமிழக போலீஸ் மற்றும் அரசின் மகளிர் தின பரிசு இது தான். அப்பாவி மக்களை கொல்லுபவர்களாக உள்ளார்கள் பல போலீஸ்காரர்கள். எல்லாம் அரக்கர்கள்.
|
மாதவம்
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேணுமம்மா ! என்பது தினமும் படிக்கக்கூடிய வாசகமாக மாற வேண்டும்.












Click it and Unblock the Notifications