திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தம்புராஜ் தற்காலிகமாக நீக்கம்
திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தம்புராஜ் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை: திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் பொறுப்பிலிருந்து தம்புராஜ் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வி.எம்.சுதாகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தம்புராஜ் , ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் முரணாக செயல்பட்டு கொண்டிருப்பதால் அவரை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக தகுதிநீக்கம் செய்து அவருடைய செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் கண்காணித்து அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில் அவருடைய பதவி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்ற எந்த விதத்திலோ தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆர்.அரவிந்த் மாவட்ட செயலாளர் பணிகளையும் தற்காலிகமாக கூடுதலாக கவனிப்பார் என்பதை தெரிவித்துக் கொண்டு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் அவருடன் ஒன்றுபட்டு செயல்படவும் ஒத்துழைக்கவும் அன்புத் தலைவர் ஒப்புதலின்படி அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.