ஆளுநருடன் ஓபிஎஸ் அணி மைத்ரேயனும் திடீர் சந்திப்பு!
முதல்வர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. இன்று ஆளுநரை மீண்டும் சந்தித்து பேசினார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மாநிலங்களவை எம்.பி. மைத்ரேயன் மற்றும் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரை சந்திப்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன் நேற்று மாலை கிண்டி ராஜ்பவன் வந்தனர். அவருடன் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும் வந்திருந்தார். ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஏற்கனவே ஒரு முறை இவர்கள் ஆளுநரை சந்தித்து பேசினர். அந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான என ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் மீண்டும் நேற்று சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை 5.30 மணி அளவில் ஆளுநரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து 40 நிமிட இடைவேளியில் ஓபிஎஸ் தரப்பு சந்திப்பு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications