வைகுண்ட ஏகாதசி உற்சவம்- ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ஒரு நிமிடம் நின்று செல்லும்!
திருச்சி: வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வைகை விரைவு ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நாளை மற்றும் வருகிற 22 ஆம் தேதி மதுரைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதேபோல் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து நாளை மற்றும் வருகிற 22 ஆம்ம் தேதி சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இந்த சிறப்பு நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமிநாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுது போக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications