காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திமுக ஆட்சியில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை - வைகோ
திமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சிக்கவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக திமுக ஆட்சியின் போது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் வைகோ நேற்று கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் நீதிக்கு புறம்பாக மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. தமிழக அரசின் நிர்பந்தத்தால் சிறுவாணியில் அணை கட்டும் நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக திமுக ஆட்சியின் போது எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சிறுவாணியில் கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. நதி நீர் பிரச்சனையில் சட்டபூர்வமான போராட்டம் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஜெயலலிதா என வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications