ஆளுநருடன் திடீர் சந்திப்பு- பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியமே இல்லை: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வைகோ இன்று வருகை தந்திருந்தார். அங்கு மருத்துவர்களிடம் ஜெயலலிதாவுக்கான சிகிச்சைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

லண்டனில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட்டையும் வைகோ சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு 2 முறை வருகை தந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்காக அவருக்கு வைகோ நன்றி தெரிவித்தார்.

Vaiko meets TN Governor Vidhyasagar Rao

பின்னர் திடீரென ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வித்யாசகர் ராவை வைகோ சந்தித்தார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஆளுநர் வித்யாசகர் ராவ் என்னுடைய பழைய நண்பர். இந்த சந்திப்பில் அரசியல் ரீதியாக எதுவுமே பேசவில்லை. முழுவதும் நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே.

தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியமே இல்லை. 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது போரை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் போராடினோம். அப்போது ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வராக இருந்த கருணாநிதி 45 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாரே.. அப்போது பொறுப்பு முதல்வர் கேள்வி எழவில்லையே.

இவ்வாறு வைகோ கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+