Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேதாஜி மரணத்தில் உண்மைகளை வெளியிடக் கோரி மார்ச் 23-ல் போராட்டம்- லாலு,சரத் யாதவ் பங்கேற்பு: வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேதாஜி மரணத்தில் உள்ள உண்மைகளை வெளியிடக் கோரி டெல்லியில் மார்ச் 23-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகளை தெளிவாக்கிவிட்டது என்றார்.

தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான வகையில் பொது பட்ஜெட் அமையும் எனவும் கருத்து கூறிய வைகோ, விமான நிலையத்தையும் தனியார் மயமாக்க அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

Vaiko protest in Delhi on the memorial day of Bhagat Singh on March 23

தேனி மக்களுடன்

நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க மேத்தா பட்கருக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார். நியூட்ரினோ திட்டம் குறித்து மார்ச் 1ம் தேதி தேனியில் மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் வைகோ தெரிவித்தார்.

நிலஅபகரிப்பு

கார்ப்பரேட் நிறுவனங்களை திருப்திப் படுத்தவே நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று குறிப்பிட்ட வைகோ, இந்த சட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றார்.

நேதாஜி உண்மைகள்

மேலும் அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் பற்றிய உண்மைகளை வெளியிட மோடி அரசு மறுக்கிறது. அவர் சித்ரவதை செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வெளிநாடுகளுடனான உறவு பாதிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் நேதாஜி பற்றிய உண்மைகளை வெளியிடக் கோரி டெல்லியில் மார்ச் 23ஆம் தேதி போராட்டம் நடத்தப்போகிறோம். இந்த போராட்டத்தில் சரத்யாதவ், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும் வைகோ கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+